Thursday, August 05, 2021

 Filmmaker Varuna



எனக்கு ஜெர்மனில கொஞ்சம் கசின்ஸ் இருக்கிறாங்க. கண்ணே கண்ணுன்னு ஒரு தங்கச்சியும் ஒருத்தி இருக்கிறாள். சில பல வருடங்களுக்கு முந்தி இங்கே கனடாவுக்கு வந்திருந்தாள். வந்தவள் என்னேரமும் ஒரு நோட்டுப் புத்தகத்தோடுதான் இருப்பாள். மனதில் தோன்றும் கதைத் துணுக்குகளையெல்லாம் அதிலே எழுதி வைத்திருந்தாள். இருவரும் அந்தப் பயணத்தில் நிறையப் கதைத்தோம். பகிர்ந்துகொண்டோம். அதில் ஒன்று, அவளுடைய படம் இயக்கும் கனவு! கனவுகளைத் துரத்திப் பிடிக்க ஊக்கம் மட்டுமே அவளுக்குத் தேவையாக இருந்தது. அவளுடைய விடா முயற்சியினால், அவள் அவளுடைய கனவுகளைத் துரத்திக் கொண்டிருக்கிறாள். அதற்கான முயற்சியில், அவள் இந்தியாவிற்கு நிறையத் தரம் போய் வந்தாள். அங்கேயே பல மாதங்கள் இருந்தாள். முயற்சிகள் செய்த படி இருக்கிறாள்.  அவளுடைய முதலாவது முயற்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. மிக மிக மகிழ்ச்சியான தருணம் அது!!


இன்றைக்கு, அவளுடைய இரண்டாவது குறும்படம் பற்றிய செய்தியை மணி அவர்கள் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தைப் பற்றிய விவரங்களையும் படம் உருவானபோதிலிருந்து அவளிடமிருந்து அறிந்திருந்தாலும், பங்கு பெற்ற ஒருவர் பகிரும்போது வரும் சந்தோசம் வேறுதானே! அவளுடைய விடாமுயற்சியால்தான் அவள் இந்த இரண்டு குறும்படங்களையும் உருவாக்கி இருக்கிறாள். இன்னமும் அவள் மென்மேலும் வளருவாள் என்பது அவளுடைய விடாமுயற்சியே சொல்லுகிறது. 


வருணாவின் குறும்படம் இன்னமும் அவள் பொதுவில் பகிரவில்லை. திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியபடி இருக்கிறாள். என்றைக்கு, அவள் பொதுவில் பகிருகிறாளோ, அப்போது நானும் இங்கே பகிருகிறேன்.






























Comments on ""

 

post a comment