Monday, August 23, 2004

குடத்தில் இட்ட தீபங்கள் - அப்துல் ஜப்பார்

மரத்தடியில் ஆண்டுவிழா கொண்டாட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

போன வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20 ஆசீப் மீரானின் தினம். அன்று அவர், அவருடைய தந்தை அப்துல் ஜப்பார் எழுதிய கட்டுரையொன்றைப் பகிர்ந்துகொண்டார். அதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

சமீபத்தில் வலைப்பதிவுகளில் ஒரு சுற்றுச் சுற்றி சற்றே ஓய்வு பெற்றிருக்கும் விவாதத்திற்கு இதில் பதில் இருக்கிறது. 'மூக்கு' சுந்தரின் வலைப்பதிவிலும், இங்கும் நான் திருப்பித் திருப்பி சொன்ன விஷயங்களை அழகாக எடுத்துரைத்திருக்கிறார் அப்துல் ஜப்பார் அவர்கள். இதுவாவது சிலர் காதுகளில் அடைந்திருக்கும் குடும்பிகளைத் திறந்தால் சந்தோஷம்.

-மதி


குடத்தில் இட்ட தீபங்கள்


நேரடித் தொடர் வண்டிகள்,பேருந்துகள் அனைத்தும் புறப்பட்டுப் போய்விட்ட அகால வேளையில் சென்னையில் உறவினர் ஒருவரின் பிரிவுச் செய்தி கிடைக்கிறது. உடனே புறப்படுகிறேன். தென்காசி, செங்கோட்டை, ராஜ பாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரை, மணப்பாறை, திருச்சி, உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம், தாம்பரம் என்று குறுக்கு வெட்டாக தமிழ்நாட்டின் ஒரு கணிசமான பகுதி வழியாக 22 மணி நேரம் தொடர்ந்து பிரயாணம் செய்கிறேன்.தமிழ் நாட்டின் உணர்வுகளைக் கொஞ்சம் நேரிடையாகவே நாடிப் பிடித்துப் பார்க்க இஇது உதவுகிறது..

முதலில் கண்ணையும்,கருத்தையும் கவர்வது கடைகள்தோறும் கட்டித் தொங்க விடப்பட்டுள்ள தமிழ் சஞ்சிகைகள்.. இஇவை அநேகமாக வாரம்தோறும் வியாழன் வெள்ளி தினங்களில்தான் வெளிவரும்..பெரும்பாலான பத்திரிக்கைகளில் அட்டைப்படக் கதையாக இஇடம் பெற்றிருப்பது இஇலங்கைப் பிரச்னைதான்.அதுவும் ஈழம்..குறிப்பாக, பரபரப்பான செய்திகளை வெளியிடும் 'நக்கீரன்',நந்தன்,நெற்றிக்கண்,தராசு,தாகம் சஞ்சிகைகள்தான் இஇதில் முன்னணியில் நின்றன. ஒன்று,
"யாழ் வெற்றியைத் தொடர்ந்து தனி ஈழம் உருவாகிறது" என்றது.. மற்றொன்று,"தனி ஈழம் அமைவதால் இஇந்தியாவுக்கு ஆபத்தா?" என்று கேட்டிருந்தது. மற்றொன்று "மகா ஈழம் உருவான கதை" என்று தலைப்பிட்டிருந்தது.தெரிந்த செய்திகள்தான் எனினும், புதிய கோணங்களில் பரபரப்பையும் சேர்த்திருந்தன பத்திரிக்கைகள். இஇதன் பொருள் தமிழ்க வாசகர்களின் கவனம் முழுவதும் இஇலங்கைப் பிரச்னையிலேயே இஇருக்கிறது..அந்த 'தாகத்துக்கு' தண்ணீர் வார்க்கிறார்கள் இஇவர்கள். கவனத்தை ஈர்த்த இன்னொரு விஷயம் வழிநெடுக சுவர்கள் தோறும் மின்னிய வண்ணச் சுவரொட்டி - அது புதிய தமிழகம் கட்சி இஇலங்கைத் தமிழர் ஆதரவு பேரணிக்கு மக்களுக்கு விடுத்த அழைப்பு. இஇலங்கை
வரைப டத்துக்குள்ளே நின்று கொண்டு அழைப்பது போலஇ இந்த வண்ணச் சுவரொட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது..ஆனால், ராஜ பாளையத்தில்?!.......

விடுதலைப் புலிகளின் இராணுவ உடை தரித்த ஒரு கம்பீரமான உருவம் கட்-அவுட்டாக வைக்கப்ப்ட்டிருந்தது.. தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைவருக்குத் தமிழ் நாட்டில் கட்-அவுட்டா என்றெண்னி அருகே சென்று பார்த்தபோதுதான் அது வை.கோ-வின் உருவத் தோற்றமென்று நமக்குப் புரிகிறது.."க்டல் கடந்து வாழும் தமிழர்களின் கலங்கரை விளக்கே" என்கிற வாசகமும் அடியில் எழுதப்பட்டிருக்கிறது.

பக்கத்தில் ஒரு குரல்"என்ன அப்படி அதிசயமாகப் பார்க்கிரீர்கள்?தடை செய்யப்பட்ட ஓர் இஇயக்கத்தின் உடையில் இஇவ்வளவு தைரியமாக இஇப்படி ஒரு கட்-அவுட் என்றா?" உண்மைதான். இஇத்தடைச் சட்டம் வந்ததும் ஏதேனும் ஒரு சரத்தின் கீழ் எப்படியாவது உள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயம் வந்து பலர் அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால்,எங்க தலைவர் துணிஞ்சுட்டார். புலிகளை ஆதரித்தால் கூடிக்கூடிப் போனால் என்ன தண்டனை தருவீர்கள்? என்ன தூக்கு தண்டனையா?அதனால் என்ன நடக்கும். உயிர் போகும் அவ்வளவுதானே? அதற்கு மேல் ஒன்றும் நடக்காதே?உயிர் ஒரு முறைதான் போகும். அது ஒரு நல்ல இலட்சியத்துக்காகப் போகட்டும் என்று துணிந்து விட்டால்..? சரி. அப்படியே சாவது என்றாலும் நாங்கள் சும்மா சாக மாட்டோம்" என்றவரை இ இடைமறித்தேன்.

"உங்கள் கடைசி வரிகளைத்தான் தீவிரவாதம் என்கிறார்கள்..அதனால்தான் தடை செய்திருக்கிறார்கள்"

பதிலாக அவர்,"காலிஸ்தான்,காஷ்மீர்,அஸ்ஸாம்,நாகாலந்து,திரிபுரா என்று இஇடத்துக்கு இஇடம் தீவிரவாத இயக்கங்கள் இஇருக்கின்றன.இஇவற்றுள் எதைத் தடை செய்திருக்கிறீர்கள்?சாதி,சமயங்களின் பெயரால் எத்த்னை தீவிரவாத இஇயக்கங்கள்? இஇவற்றின் நிலை என்ன?"

நான் சொன்னேன்."அவற்றில் எவையுமே ஒரு நாட்டின் பிரதமரைக் கொலை செய்யவில்லை என்று சொல்கிறார்களே?"

"அதனால்தான் தடையா? அப்படியானால்,மஹாத்மாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்சை ஏன் தடை செய்யவில்லை? இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்ற அகாலிதளத்திற்கு ஏன் தடை விதிக்கவில்லை? செய்தார்கள்.. ஆர்.எஸ்.எஸ் சை மூன்று முறை செய்தார்கள். பிறகு அரசே அவற்றை வாபஸ் பெற்றது. மூன்றாவது முறை அவர்களே நீதி மன்றம் சென்று தடையை உடைத்தார்கள்."

"நாதுராம் கோட்ஸே என்ற தனிமனிதரை நீங்கள் எப்படி ஆர்.எஸ்,எஸ் என்ற இஇயக்கத்தோடு முடிச்சுப் போட முடியும்?" இ இது நான்

"நாங்க முடிச்சுப் போடலய்யா.."மே நாதுராம் கோட்ஸே போல்தீ ஹ¥ம்" என்று அவர்களே நாடகம் போட்டு முடிச்சைப் போட்டுக் கொண்டார்கள். இஇந்திரா காந்தியைக் கொன்றது சீக்கியர்.. அவரை அகாலிதளத்தோடு முடிச்சுப் போடுவது சரியில்லைதான்.. ஆனால், கைநாட்டுக் கூடப் போடத் தெரியாத அவர் மனைவியைத் தன் கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெறவும் வைத்ததன் மூலம் தானாகவே முடிச்சுப் போட்டுக் கொள்கிறதே அகாலிதளம்!! ஆக,அவர்களையெல்லாம் விட்டு விட்டார்கள்.விடுதலைப்புலிகளை பிடித்துக் கொண்டார்கள்.ஏன்னா,தமிழன் மட்டும்தான் இஇளிச்சவாயன்.. நாங்க என்ன பாவம் செய்தோம்..தப்பு செய்தவங்களுக்குத் தண்டனை கொடு..
ஆனால்,தவிக்கும் தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள்?அடிபட்டவன் தமிழன்.. மிதிப்ட்டவன் தமிழன்...சொத்து-சுகம்-வருவாய்-வசதி ஏன்,வாழ்க்கையையே தொலைத்து விட்டவன் தமிழன்.. அவனைக் காப்பாற்றச் சென்ற ராணுவம் அவனையே அடித்துக் கொன்ற கொடுமை வேறெங்காவது நிகழ்ந்ததுண்டா?"

அகப்பட்டுக் கொண்ட 40,000 படைதான் இஇவர்கள் கண்களுக்கு தெரிகிறது..ஐந்து லட்சம் மக்களைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? இஇலங்கைப் படை புலிகளை அழித்தொழிக்கச் சென்றது.. அதன் பலன்களை அவர்களே அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடுவதுதான் நல்லது.. ஆனால்,எந்தப் பாவமும் செய்யாத அப்பாவித் தமிழர்களின் உயிர் காப்பாற்றப் பட வேண்டாமா? இஇவர்களுக்குத் தேவையான உணவு வகைகள் முறையாக விநியோகம் செய்யப்படுவதாக இஇலங்கை அமைச்சர் அனுதினமும் சொல்கிறார்.காதில் பூச்சுற்றவும் ஒரு அளவில்லையா? ஐயா, உன் படைக்குத் தேவையான உணவையும்,மருந்தையுமே உன்னால் விநியோகிக்க வக்கில்லை,.அப்பாவித் தமிழர்களைப்பத்தி நீ எங்கே கவலைப்படப்போறே? இஇங்கேதான் இஇந்தியா தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று நாங்க சொல்கிறோம்"

"சரி,அப்படியே வைத்துக் கொண்டாலும் ஒரு அண்டை நாட்டின் உள்விவகாரங்களில் அவர்கள் சம்மதமில்லாமல் நாம் எப்படித் தலையிட முடியும்?"

"பங்களாதேஷ் நம் உள்நாட்டு விவகாரமா? பாகிஸ்தானிய உள்விவகாரம்தானே? நாம் தலையிட்டு,அந்த நாட்டைத் துண்டாடி தனி நாடே அமைத்துக் கொடுக்கவில்லையா?அவர்கள் என்ன மேற்கு வங்கத்தில் உள்ள வங்காளிகளையும் சேர்த்து என்ன மகா பங்களாதேஷா அமைத்து விட்டார்கள்?தனி ஈழம் வந்து விட்டால் மட்டும் அது தமிழ்நாட்டுடன் சேர்ந்து மகா ஈழமாக மாறும் என்று ஏன் கற்பனை செய்கிறீர்கள்? அன்று நாம் நடவடிக்கை எடுக்க முக்கிய காரணம் அங்கிருந்து இஇங்கு வந்த அகதிகளதானே?!அந்த பாரத்தை மேலும் தாங்க இஇயலாது என்றுதானே அன்று இஇந்தியா காரணம் சொன்னது? இஇன்றும் நிலைமை அதுதானே?அகதிகள் வந்து குவிந்து கொண்டுதானே இஇருக்கிறார்கள்? ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.. இஇலங்கையை ஆள்பவன் பாகிஸ்தான்காரன் என்று வையுங்கள்.. ஈழம் என்றோ ஏற்பட்டிருக்கும். ஏற்பட இஇந்தியா உதவி இஇருக்கும். ஆனால்,ஆள்பவன் சிங்கள ஆரியன். முன்னை நாள் இஇந்திய டுடே ஆசிரியர் இஇந்தியன் எக்ஸ்பிரஸில்
எழுதிய கட்டுரையில்,"உதவி செய்ய தமிழர்கள் நமது உறவுக்காரர்கள் என்பது ஒரு காரணமாக இஇருக்கக் கூடாது.. அப்படிப் பார்த்தால் தமிழர்கள்தான் அங்குள்ள பழங்குடிகள்..அவர்களுக்குப் பின்னர் இஇந்தியாவிலிருந்து இஇலங்கைக்குச் சென்று குடியேறியவர்கள்தான் சிங்களவர்கள்.. ஆகவே அவர்கள்தான் நமக்கு first cousins" என்கிற அர்த்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் கூட ஈழ ஆதரவு,எதிர்ப்பு என்று இஇரண்டு அணிகள் இஇருக்கின்றன. திராவிட இஇயக்கங்கள் ஆதரிக்கின்றன..ஆரிய பத்திரிக்கைகள் எதிர்க்கின்றன"

நான் கேட்டேன்."இஇந்தியர்கள் ஆதரிப்பதும் எதிர்ப்பதும்இ இருக்கட்டும்.சந்திரிகாவே தமிழர்கள் எங்கள் எதிரிகளல்லர்.. சகோதரர்கள்தான் என்று சொல்லியிருக்கிறாரே"

பதில் பளீரென வந்தது.."நாங்கள் மட்டும் என்ன மாத்தியா சொல்றோம்? நங்களும் அதையேதான் சொல்றோம். இஇதில் நினைப்பு மட்டும் போதாது.செயலும் வேண்டும். ஆனால், இஇவர்களது செயல் எங்களை அடிமையாக்குவதாகத்தானே இருந்தது?அங்குதானே பிரச்னை ஆரம்பித்தது?வாழு,வாழ விடு என்கிற தத்துவம் இஇலங்கையை எவ்வளவோ முன்னேற்றியிருக்குமே!!.'நான் மட்டுமே வாழுவேன்.. நீ எக்கேடோ கெட்டுப் போ' என்று சொன்னதால்தா னே பிணக்கு பிரச்னை எல்லாமே.."

"அஹிம்சையை விரும்பும் பௌத்த்ர்களும்,"லோக சுகினோ பவுந்து" என்கிற தத்துவத்தில் ஊறிய

இஇந்துக்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்ந்திருக்க வேண்டுமே? எங்கே தவறு நிகழ்ந்தது?" இஇது நான்.

"பௌத்த சாமியார்களுக்கு ஆன்மீகத்தை விட அரசியலில் அதிக ஆசை..அஹிமசையைக் கடைப்பிடித்தார்களோ இல்லையோ வன்முறையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தார்கள். பிரச்சாரம் செய்தார்கள்.பண்டார நாயக்கவைக் கொன்றதே ஒரு பௌத்த சாமியார்தான்.அந்த வழக்கில் முதல் குற்றவாளி ஒரு பிரப்லமான பௌத்த மடத்தின்பெரிய சாமியார்.58-இல் நடந்த வகுப்புக் கலவரங்களுக்கு மூல காரணமும் முழுமுதல் காரணமும் இஇவர்கள்தாம். கதிர்காமம் போகும் வழியில் "கருத்துனா"
என்னுமிடத்தில் ஒரு முருகன் கோவில் இஇருக்கிறது..அதன் பூசாரி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.அந்த இஇடத்தை மட்டும் இஇன்னமும் வெள்ளையடிக்காமல் இஇன்னும் அப்படியே வைத்திருக்கிறார்கள். "பறதெமனோ" என்று இஇழித்துரைக்கப்பட்டபோதும் அமைதி காத்தவர்கள்தான் தமிழர்கள். இஇனியும் தாங்க முடியாது என்றபோதுதான் ஆயுதங்களைக் கையில் எடுத்தார்கள்..வலுக்கட்டாய்மாக அவர்கள் கைகளில் ஆயுத்ங்களைத் திணித்து விட்டு அவர்களைத்
தீவிரவாதிகள் என்பது என்ன நியாயம்? இஇருப்பதை இஇவனுடன் பங்கு போட்டுக் கொள்வதா என்றுதான் சிங்களவர்கள் தமிழர்களை ஒதுக்குகிறார்கள். ஆனால், இஇத்னை விட எத்தனயோ பங்கு உற்பத்தி செய்யலாமே, எல்லோரும் ஒற்றுமையாக,சந்தோஷமாக வாழலாமே என்று அவ்ர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்.மதி நுட்பத்திலும்,புத்திக் கூர்மையிலும் இஇங்குள்ள பிராமண சகோதரர்களை உயர்வாகச் சொல்வார்கள். ஆனால், இஇவர்களை விட இஇலங்கைத் தமிழர்கள் ஒருபடி மேல்.. இஇன்று அகதிகளாக உலகெங்கும் பரவி வாழும் இஇவர்கள் கௌரவம் மிக்க இஇலங்கைப் பிரஜைகளாக உலகெங்கும் சென்று பொருளீட்டி இஇலங்கையை ஒரு குபேர பூமியாக்கி விட்டிருப்பார்கள்.
சிங்களவர்களின் குறுகிய மனப்போக்கு அதைச் செய்ய விடாமல் தடுத்து விட்டது."

அவர் தொடர்ந்தார்." இஇன்று துப்பாக்கிக்கும்,தோட்டாவுக்கும் இஇலங்கை அரசு செலவழிக்கும் பணத்தை நாட்டின் மேம்பாட்டு திட்டங்களில் செலவழித்திருந்தால் தமிழர்கள் கேட்டது மட்டுமில்லாமல் அதற்கும் மேலாகவே கொடுத்திருக்கலாம். இஇப்போது பட்ஜெட்டில் பாதி படைக்காகப் பயன்படுகிறது.அது போக 175 மில்லியன் டாலர்கள் அதிகம் செலவு செய்யப் போகிறார்களாம்.அன்றாட உபயோகப் பண்டங்கள் அத்த்னைக்கும் வரிக்கு மேல் வரி.. நாட்டின் உணவுக்காக ஓரு ஆண்டு முழுவதும் தேவைப்படும் தொகை போரில் வீணானால் எந்த நாட்டால்,எத்த்னை காலம் தாக்குப் பிடிக்க இஇயலும்? இஇந்த நிலை குறித்து,எங்கள் நாடு இஇப்படி சிதைந்து சின்னாபின்னமாகிறதே என்று கண்ணீர் வடிக்காத இஇலங்கைத் தமிழர்கள் யாரேனும் இஇருப்பார்களா?"

"சரி.. இஇவ்வளவுக்குப் பிறகும் சர்வ தேச நாடுகளீன் ஆதரவு இஇலங்கைக்குத்தானே இருக்கிறது?"

"இஇருக்காதா பின்னே.இ.இலங்கை அரசுக்கு ராஜ தந்திர தூதுவராலயங்கள் உலகெங்கும் இஇருக்கின்றன. இஇலங்கைத் தமிழர்களுக்கென்று யார் இஇருக்கிறார்கள்? மேலும் ஊடகங்கள் மேற்கத்திய நாடுகளின் கைகளில்..அமெரிக்கா சீனாவுடனான ஆதிக்கப் போட்டியில் இஇலங்கையை அரவணைத்துப் போகிறது..அதுவும் நேரிடையாக இஇல்லாமல் தன் சிஷ்யப்பிள்ளை இஇஸ்ரேல் மூலம்..நேரிடையாகத் தலையிட்டுப் பார்க்கட்டும்.. இஇன்று இலங்கை அரசின் பக்கம் இருக்கும் சீனா இஇலங்கைத் தமிழர் பக்கம் திரும்பும்..மேலும் ஒரு நாட்டின் இஇறையாணமை என்ற விஷயம் ப்ல நாடுகளைக் குழப்புகிறது.. ஆனால்,மீறப்படும் மனித உரிமைகளை இஇதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சாயம் வெளுத்து விடும்..
விடுதலைப் புலிகளின் சொல்லையும் செயலையும் தீவிரவாதம் என்று விமர்சிப்பவர்கள் சிங்கள வீரவிதானை அமைப்பின் ஒரு மேடைப் பேச்சையாவது கேட்கட்டும். பிறகு சொல்லட்டும்.எது தீவிரவாதமென்று? அடிப்பவன் அடிபடுபவனை தீவிரவாதி என்றால் என்ன சொல்வது?

"சரி,கலைஞரே உங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லையே?"

"இஇலங்கைத் தமிழர் ஆதரவில்இ இன்று முதலிடம் வைக்கோவுக்கு இ.இரண்டாமிடம் டாக்டர் ராமதாஸ்..மூன்றாமிடம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.. நான்காவது இஇடத்தில் இஇருக்கக் கலைஞருக்கு விருப்பமில்லை..எதிர்க்கட்சியாக இருந்திருப்பின் அவர்தான் முதலிடத்தில் இஇருந்திருப்பார். இஇன்று கூட்டணி ஆதரவில் மாநிலத்தில் ஆளும்கட்சி. ..மத்தியில் கூட்டணியில் பிரதான பங்கு வகிக்கும் கூட்டுக் கட்சி. எனவே,முழு தமிழர் ஆதரவு-புலிகள் எதிர்ப்பு என்றொரு வினோத நிலை.அறிஞர் அண்ணா மூதறிஞர் ராஜாஜியை 'குல்லுகப்பட்டர்" என்றார்.. இஇன்று ராஜாஜி இஇருந்திருந்தால் அந்தப் பட்டம் கலைஞருக்குத்தான் பொருந்தும் என்று சொல்லியிருப்பார். மாநிலத்தில் தமிழர் ஆதரவு கொட்டில் ஒர் தட்டு.. மத்தியில் புலிகள் எதிர்ப்பு ஜால்ராவில் ஒரு தட்டு என்று சாணக்கிய அரசியல் நடத்துகிறார் அவர்"

"சரி,உங்கள் பெயரென்ன?உங்கள் கருத்துக்கள் தெளிவானதாகவும்,தீவிரமானதாகவும் இருக்கிறதே?"

"அது முக்கியமல்ல..மேலும் நான் சொன்ன கருத்துக்கள் எல்லாம் எனது ஏக போக சிந்தனையின் விளைவு அல்ல. தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் ஒட்டு மொத்தக் கருத்துக்கள்தான்.. ஆகவே,என் கருத்தென்று வேண்டாம்"

"இஇப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன்..நீங்கள் என்ன பத்திரிக்கையாளரா?"

"இஇல்லை"..

"நம்ப முடியவில்லை" - இஇது நான்.

"நம்ப முடியாது..ஏனெனில், இஇங்குள்ள பத்திரிக்கைகள் தங்கள் எஜமானர்களின் உத்தரவின் பேரில்,தங்களுக்கு இஇனிக்கும்,தாங்கள் திணிக்கும் கருத்துக்கள்தாம் தமிழகத்தின் கருத்து போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த் முனைகிறார்கள். எனவே, இஇலங்கைத் தமிழர்கள் மத்தியில் கூட தமிழகத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகிறது.நீங்கள் யாரோ எனக்குத் தெரியாது. என் கருத்துக்கள் முழுவதையும் நீங்கள் ஏற்க வேண்டும் என்றோ பிரசுரிக்க வேண்டுமென்றோ நான் கோரவில்லை. ஆகவேதான்,என் பெயரைக் கூட நான் சொல்லவில்லை. நன்கு சிந்தியுங்கள்.. உங்களுக்கு எது நியாயம்
என்று படுகிறதோ அதை வெளியிடுங்கள். எதைச் செய்தாலும் தங்கள் சொந்த நாட்டிலேயே கைவிடப்பட்ட,அண்டை நாட்டாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத,மேலைத் தோல் ஊடகங்களால் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய காரணங்களால் திட்டமிட்டுப் பழிவாங்கப்படும்,தினம் தினம் கண்ணீரையும் , செந்நீரையும் சிந்தும் லட்சக்கணக்கான அப்பாவி
இஇலங்கைத் தமிழ் மக்களின் பரிதாப நிலையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்து எதையும் செய்யுங்கள். தர்மத்தைச் சூது கவ்வும்.ஆனால் தர்மம்தான் வெல்லும்.விடை தாருங்கள் நண்பரே! உங்களை தமிழ் வெறியராக இஇருக்கச் சொல்லவில்லை. மனித நேயம் உள்ளவராக இருங்கள். அது போதும். வணக்கம்'

அன்று நியாயம் கேட்டு கண்ணகி எரித்த கூடல் மாநகர் - அதுதான் மதுரை - வருகிறது. விடைபெற்றுச் செல்கிறார் நண்பர்.ஆனால், அவர் சொல்லிச் சென்றவை இஇன்னமும் என் சிந்தையில் நிற்கின்றன..

எத்தனைக் குடத்தில் இஇட்ட தீபங்கள் ஐயா இந்த நாட்டிலே?!!!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

-o0o-

நன்றி: அப்துல் ஜப்பார், ஆசீப் மீரான் & மரத்தடி

Thursday, August 12, 2004

என்னுடைய கருத்து

கடந்த சில தினங்கள் கொஞ்சம் வித்தியாசமாகவே செலவழிந்தன.

வலைப்பதிவுகளில் வழமையாக நடக்கும் சொல்லாடல்களோடு சொல்ல வாய் கூசும்/யோசிக்கவே மனதும் உள்ளமும் எரியும் அசிங்கமும் நடந்தேறியிருக்கிறது.

எல்லாம் சாதாரணமாகத்தான் தொடங்கியது. சந்திரவதனா, ஈழத்தில் இந்திய அமைதிப்படையினர் செய்த கொடுமைகளை அனுபவித்தவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் அதைப்பற்றி நேரடி அனுபவமாகவோ, படைப்பாகவோ எழுதி, அவற்றையெல்லாம் சேகரித்து புத்தகமாகப் போட விரும்பும் ஓர் அமைப்பிடம் கொடுக்கலாம் என்று சொன்னார். அவ்வமைப்பினர் அவருக்கு அனுப்பியிருந்த விவரங்களையும் தமது இணையத்தளத்தில் பகிர்ந்துகொண்டார். 'தோழியர்' குழு வலைப்பதிவிலும் அவருடைய மடல் வந்திருந்தது.

கடந்த ஞாயிறு ஆகஸ்ட் 8, வலைப்பூவில் சந்திரவதனா இட்டிருந்த சுட்டியினைத் தொடர்ந்து சென்று விவரங்களை அறிந்த சுந்தரவடிவேல் தாம் மாணவராக இருந்தபோது இந்திய அமைதிப்படையில் பணிபுரிந்த ஒருவர் தமது பள்ளியில் சொன்னதைப் பகிர்ந்துகொண்டார். அத்தோடு, அந்நேரத்தில அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டதற்கு வெட்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். ஏனைய வலைப்பதிவுகளில் இந்திய அமைதிப்படையினர் செய்த அட்டூழியங்களைப் பற்றி வந்திருந்ததையும் குறிப்பிட்டு சுட்டியும் கொடுத்திருந்தார். அவருடைய வலைப்பதிவில் அவ்வளவுதான் இருந்தது. இந்திய அமைதிப்படையினரில் ஒருவர் சொன்ன செய்தியும், பெண்கள், குழந்தைகள் என்று அமைதிப்படையினரால் பலிகொடுக்கப்பட்டவர்கள் பற்றிய சோகமும். இலங்கை இனப்போராட்டம் என்று சொன்னதுமே இராஜீவ் படுகொலையைப் பற்றிச் சொல்லி இந்திய அமைதிப்படையினர் செய்த அசிங்கங்களை மூடி மறைப்பது கூடாது என்று சொல்லியிருந்தார்.

அவருடைய பதிவில் இப்போது மணிப்பூரில் நடந்ததைப் பற்றி ஒரு கருத்து வந்திருந்தது.


-o0o-

நாமெல்லோரும் ஒரேமாதிரி எப்போதும் சிந்தித்துக்கொண்டு ஒரே விருப்பு வெறுப்புகள் கொண்டிருந்தால் பத்து நிமிடம்கூட நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது. சீக்கிரம் முடியைப் பிய்த்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிடுவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துகள் இருக்கும். சிற்சில கருத்துகளில் ஒத்த நிலை எடுக்கும் சிலர், வேறு சிலவற்றில் முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பார்கள். காலப்போக்கில், விஷயம் அறிந்து தெளிவாகி கருத்துகளை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பமோ சூழ்நிலையோ சீக்கிரம் வரவும் போவதில்லை என்று தெரிந்துகொண்டு 'உன் கருத்து உனக்கு; என் கருத்து எனக்கு' என்று போகிறார்கள். ஒருமித்து இயங்கக்கூடிய விஷயங்களில் சேர்ந்து இயங்குகிறார்கள்.

இதுதான் என்னுடைய புரிதல். இதுதான் எனக்குப் பிடித்த விஷயமும். என்னுடைய நண்பர்கள், சகோதர சகோதரிகள், உறவினர் எல்லோருடனும் மேற்கூறிய அணுகுமுறையையே பாவித்து வருகிறேன்.

-o0o-

சுந்தர் வடிவேலுவின் கருத்துக்கு மாற்றுக்கருத்துக்கொண்ட 'மூக்கு' சுந்தர் அவருடைய வலைப்பதிவில் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார். ஒவ்வொருவரும் தத்தம் வண்ணங்களையும் புரிதல்களையும் கொண்டு அவரவருக்கேற்ற வண்ணக் கண்ணாடிகள் வழியாகப் பார்ப்பதுண்டல்லவா? அதுபோல சுந்தர் அவருடைய புரிதலின் படி கடிதமும் எழுதி இருந்தார். என்னுடைய பார்வையில் சுந்தர்வடிவேலு 'எந்தவொரு குற்றமும் அறியாத நீராயுதபாணிகளான பெண்கள், ஆண்கள் சிறுவர்களை இந்திய அமைதிப்படையினர் பல்வேறு சித்திரவதைகள் செய்து கொன்றொழித்தது' என்று எழுதியிருந்த பதிவு; 'மூக்கு' சுந்தருக்கு புலிவரிப் பார்வையாகத் தெரிந்து அரசியலை இழுத்து, வழக்கம்போல இராஜிவ் படுகொலையை இழுத்து (அது ஒன்றே போதும் எல்லோரையும் சிப்பிலியாட்ட) தனியொரு மனிதன் செய்த காமக்கொடூரங்களை எப்படி இந்திய இராணுவத்தின்மீதே சுமத்தலாம் என்ற கொதித்து பிறகு எப்போதையும்போல 'புலிகளை சனநாயகப் பாதைக்குத் திரும்பச் சொல்லுங்களேன். ஆயுதங்களைத் தூக்கியெறியச் சொல்லுங்களேன்' என்ற பல்லவியோடு முடிந்திருந்தது.

'மூக்கு' சுந்தருடைய கருத்து அவருடையது. சுந்தரவடிவேலுவின் கருத்தும் கவலையும் வெட்கமும் அவருடையது. இரண்டும் அவரவருக்கான கருத்து சுதந்திரம்.

-o0o-

செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகும் முன்பும் அமெரிக்கா நடந்துகொள்ளும் விதத்தைக் கண்டித்தவர்கள் இங்கே அநேகர்(நான் உட்பட). ஈராக்கில் தாக்குதல் செய்யத் தொடங்கிய அமெரிக்க இராணுவம், அங்கேயிருக்கும் சிறைச்சாலையில் ஈராக்கியர் சிலரைப் பிடித்து வைத்திருந்தது. அதில் சிலரை பலவிதமான முறைகளில் கொடுமைப்படுத்தியது. அவற்றையெல்லாம் மூடி மறைக்காமல் உலகத்திற்குச் சிலர் வெளிக்கொணர்ந்தனர். வெளிக்கொணர்ந்தவர்கள் வேறு யாருமில்லை. அமெரிக்க இராணுவத்தில் சிலரே! இப்போது அதற்கான விசாரணைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

என்னுடைய கேள்வியெல்லாம்(முதலில் இருந்தே) பொதுமக்களைக் காப்பதற்கு என்று சென்ற இந்திய அமைதிப்படை அவ்வாறு செய்ததா? Indian Peace Keeping Force என்றழைக்கப்பட்ட இந்திய இராணுவம், இலங்கையில் பரவலாக எல்லோராலும் 'இந்திய பிள்ளை கொடுக்கும் ·போர்ஸ்' என்று அழைக்கப்பட்டதே. ஏன்? நெருப்பில்லாமல் புகைவதில்லை. அதற்கான விசாரணைகள் ஏதாவது நடந்தனவா?

பொதுவாக இன்னொரு நாட்டிற்குப் போர் தொடுக்கவே இராணுவம் அனுப்பப்படும். அப்படிச் செல்லும் இராணுவத்திற்குக் கூட எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தெளிவான விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். எந்த ஊர் இராணுவத்திலாவது போகும் இடத்தில் பெண்களை நாசமாக்குங்கள், சிறுமிகளைப் பலாத்காரமாக்குங்கள் என்று சொல்லி அனுப்புகிறார்களா? அவ்வாறு செய்பவர்களையும் விசாரணைக்கல்லவா உட்படுத்துகிறார்கள்! சிங்களக் காடையினருக்குக் எந்த விதத்திலும் தாம் சளைத்தவரல்ல என்றல்லவா இந்த அமைதிப்படையினர் (இப்படி அவர்களைக் கூப்பிடவே இயலாது!) நடந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படிச் சில விஷயங்கள் நடப்பதுதான். அதை நான் பொருட்படுத்தாமல் செல்ல வேண்டும் என்று சிலர் சொல்லக்கூடும். சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் பொருட்படுத்தாமல் செல்வதென்றால் ஒன்று நேரடியாகப் போருக்கு என்று வந்திருக்கவேண்டும். பாதுகாக்க வருகிறோம் என்று வந்து திட்டமிட்டு அசிங்கப்படுத்தக்கூடாது. (It's a natural urge என்று யாரேனும் சொல்வீர்களாயின், மத்திய கிழக்கு நாடுகளில் அம்மாதிரிக் குற்றங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்கள் என்று நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்வேன்.)

-o0o-

'மூக்கு' சுந்தரின் வலைப்பதிவில் அந்தப் பகிரங்கக் கடிதத்தைப் பார்த்ததுமே எனக்குத் தெரியும். எப்படியும் ஒரு சுற்று சொல்லாடல் நடக்கப்போகிறது என்று. அப்பாவிப் பொதுமக்களுக்காகப் பேசினாலும் அதற்குப் புலிவரி பூசி புலிவால் கட்டுவார்கள் என்றும் தெரியும். சாதாரண மடல்களுக்கே 'நீ புலி ஆதரவாளர்' என்று மடல் அனுப்பும் சமூகமல்லவா நமது தமிழிணையம். அப்படியே நடந்தது. இது ஒன்றும் புதிது அல்ல.

யார் யார் வருவார்கள் என்று நினைத்தேனோ அவர்களெல்லாம் வந்தார்கள். தாம் கையோடு கொண்டு வந்திருந்த வண்ணக் கண்ணாடிகளை அணிந்துகொண்டு பேசிச் சென்றார்கள்.

-o0o-

இந்திய அமைதிப்படையினர் ஈழத்தில் செய்த அட்டூழியங்களைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய உற்றார் உறவினரிடம் இருந்து நேரடியாகவே கேட்டிருக்கிறேன். அதையெல்லாம் இங்கே சொல்லிக் 'கிளுகிளுப்புக் குள்ளாக்குவது என்னுடைய நோக்கமல்ல'.

பாதிப்புக்குள்ளானவர்களிடம் இருந்து விஷயங்களைக் கேள்விப்பட்டதுபோலவே, மற்றத் தரப்பிலிருந்தும் விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய நண்பனொருவனின் மாமா, மருத்துவர். இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். இந்திய அமைதிப்படையோடு ஈழத்துக்கு அனுப்பப்பட்டவர். தெலுங்கு பேசும் சென்னைவாசியான அவரிடம் இருந்து எத்தனையோ விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறேன். சென்னை திரும்பியதும் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரமாக இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார் அவர். காரணம் நான் சொல்லத் தேவையில்லை.

-o0o-

நம்மூரில் 'ஈவ்டீசிங்' என்றால் எப்படி அலறுவோம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதுவும் நம்முடைய பேருந்துகளில் பயணிப்பதுபோன்ற நரகம் வேறு ஒன்றுமில்லை. ஒவ்வொரு பெண்ணும் நிஜமாகப் பயப்படும் பயணங்கள் அவை. இதைத் தவிர்ப்பதற்காகவே சொந்த வாகனங்கள், ஆட்டோ, மினி பஸ் என்று நம் வீட்டுப் பெண்களைப் பாதுகாப்பாக அனுப்புகிறோம் நாம். அப்படிப் பேருந்தில் சென்றுதானாக வேண்டுமென்றால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்கிறோம்.

ஈவ்டீசிங்'கில் ஒரு சரிகா ஷா இறந்துபோனால், எல்லோரும் நிலைகுலைந்து போகிறோம்.

இதைத்தான் நான் 'மூக்கு' சுந்தரின் வலைப்பதிவப் பின்னூட்டப்பெட்டியில் நினைத்துப் பார்க்கச் சொல்லி சொன்னேன்.

உடனே, ஈழத்துத் தமிழ் பெண்களை நினைத்து அனுதாபமோ, ஆதரவுக் கரமோ நீட்டுங்கள் என்று கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். அவரவர் வீட்டுப் பெண்களை எத்தனை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறோமோ, அதுபோலத்தானே அடுத்தவன் வீட்டுப் பெண்களும்?

சொந்த அரிப்பு எடுத்தோ, தூண்டுதல் காரணமாகவோ, பொதுமக்களைக் காக்கவென்று வந்த இராணுவத்தில் ஒரு பகுதியினர் வன்முறைகளில் ஈடுபட்டால் மற்றவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஈராக்கில் நடந்ததை வெளியில் கொண்டுவந்த அமெரிக்க இராணுவத்தினரைப் போல ஓரிருவர் கூடவா இந்திய இராணுவத்தில் இருக்கவில்லை?

நான் இங்கே இலங்கையில் இருந்து திரும்பி வந்தபோது காவிக்கொண்டு வந்த நகைகளைப் பற்றியெல்லாம் பேசவில்லை. செல்வம் ஒரு நாள் வரும்போகும். ஆனால், தத்தம் வீட்டுப் பெண்டிரைக் கண்ணின் இமைபோலப் பாதுகாக்கும் ஆண் சிங்கங்கள், அடுத்தவன் வீட்டுப் பெண்டிரை துவம்சம் செய்வதைப் பற்றிப் பேசுகிறேன். ஒட்டு மொத்த இராணுவமும் செய்யவில்லை என்றால், செய்த அந்த புல்லுருவிகளைப் பற்றி மற்றவர்கள் எங்கேனும் புகார் செய்தார்களா? விஷயம் தெரிந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள்?

இதையெல்லாம் கேட்கப்போனால், புலி ஆதரவாளர் என்ற பட்டம் கொடுக்கத் தயாராக அநேகர் இருக்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டாலும் 'ஹிரோஷிமா நாகசாகி'யில் பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினர் அவர்களின் துயரங்களை மறந்துவிட்டார்களா? மன்னித்து விட்டார்களா? மன்னிக்கவும் மறக்கவும் முயற்சிக்கிறோம். மன்னித்தாலும் மறக்க முடியவில்லை என்று அந்த ஜப்பானியர் புலம்புகிறார்களே!

உலகெங்கும் ஐம்பது ஆண்டுகளில் மனிதர்களின் அணுகுமுறையும், சிந்தனையும் கொஞ்சம் கொஞ்சம் மாறிக்கொண்டே வருகிறது. ஆப்ரிக்காவில், தாம் ஆட்சி செய்த நாடுகளுக்கு உதவி செய்ய முயலும் ஐரோப்பிய நாடுகள் தாம் முன்பு செய்த அட்டூழியங்களை மறைப்பதில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகள் பேசாமலிருந்தாலும் நெதர்லாந்து போன்ற நாடுகள், முன்பு நடந்ததை ஒத்துக்கொள்கிறார்கள்.

-o0o-

காலப்போக்கில் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு காலம் மருந்து கொடுத்து விடுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள்தான் ஆறுவதில்லை. ஒரே சமூகத்தில் கூட, பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களால் வேதனைக்குட்படுத்தப் படுகிறார்கள். போக்கிடம் இல்லாத அந்த அபலைகளால் மன்னிக்கவோ மறக்கவோ முடியும் என்று நினைக்கிறீர்களா? எப்படியாவது அக்காயங்களை ஆற்றும் முயற்சியாகத்தான் சந்திரவதனா சொன்ன விஷயத்தைப் பார்க்கிறேன்.

காயம் ஆறவேண்டும். அடுத்த சந்ததியும் பாதிக்கப்படக்கூடாது என்றால் காயம் ஆறவேண்டும்.

அதற்கான முயற்சிகள் எதுவும் நடக்காததால் நாமெல்லோரும் பேரிழப்புகளைத் தாங்க வேண்டி வந்தது.

அப்படி எதுவும் நடக்காமல், அடுத்த சந்ததி நிம்மதியுடன் இருப்பதற்கும் பாதிப்படைந்தவர்கள் தம் துன்பங்களுக்கு வடிகால் தேடிக்கொள்வதற்குமான ஒரு முயற்சியே http://www.selvakumaran.de/padam/OlK-Notice.pdf

-o0o-

'எல்லாம் நன்மைக்கே' என்று ஒரு மந்திரி சொல்லிக்கொண்டிருந்த கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரைப் போல, நானும் சமீபத்தைய சொல்லாடல்களை எடுத்துக் கொள்கிறேன். இல்லையென்றால் துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்றபடி விலகி நடக்கவேண்டும் என்று தெரிந்திருக்காது எனக்கு. என்னதான் படித்திருந்தாலும், கண்ணியவானாக வேஷம் போட்டாலும் இக்கட்டான சூழ்நிலைகளில்தான் நாம் ஒரு மனிதனை எப்படிப்பட்டவன் என்று அறிந்துகொள்ள முடியும். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்போல, ஒரு ex-service man. சேறு என்மீது விழாமல் விலகி நடக்கவேண்டியதுதான்!


-o0o-