Friday, February 27, 2004

Tamil one among the three fastest growing languages - London Tube Newspaper Metro

இலண்டன் மாநகரில் ஓடும் பாதாள ரயில் பயணிகளுக்காக வெளியாகும் metro பத்திரிகை பற்றி உங்களில் சிலர் அறிந்திருக்கக்கூடும். இன்று வெளியான மெட்ரோவில் வெளியான செய்தி உங்களின் பார்வைக்கும். இதனை அனுப்பி வைத்தவர் லண்டன் பத்மநாப ஐயர். இரண்டொரு நாட்களில் இச்செய்தியை ஸ்கான் செய்து அனுப்பதாக சொல்லியிருக்கிறார். வந்ததும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

அதேபோல Science இதழில் வந்திருக்கும் செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

Will Urdu become the new English?

By SUZY AUSTIN


ENGLISH is losing its dominant position in the league table of world languages, it was claimed yesterday.

By 2050, it will be overtaken by Arabic and the closely related Indian tongues of Hindi and Urdu, according to experts.

Nine years ago, about 372 million people spoke English as their first language – putting it second only to Chinese which was spoken by 1.1 billion people.

But, in 50 year’s time, the picture will change dramatically. Among 15 to 24-year-olds, the number of English speakers will fall to 65 million. Chinese will still dominate, with 166 million younger speakers.

Writing in the journal Science, researcher David Graddol said the three fastest growing languages were Bengali, Tamil and Malay.

‘The world population rose rapidly during the 20th century, but the major increase took place in less developing countries,’ he added.

‘This trend is transforming the global league table of languages.’

He said the 19th century notion that English would become a world language was ‘past its sell-by-date’. Employers in Asia were already looking beyond English.

‘In the next decade, the new must-learn language is likely to be Mandarin,’ he said, adding that of the 6,000 languages in existence, 90 percent could disappear in 100 years.

Multilingualism would become commonplace, he said. This trend could be seen in the growth of Spanish in the US, and the large number of Europeans who spoke English.

----------------------------------------------------

Friday, February 27, 2004 METRO

Monday, February 16, 2004

மான்ரியலில் இவ்வருடப் பனி

Saturday, February 14, 2004

Burghers of Ceylon



இலங்கையில் முதலில் வந்து குடியேறிய ஐரோப்பியர்கள் போர்த்துக்கீசியர்கள். பதினாறாம் நூற்றாண்டில் வந்திறங்கிய இவர்கள், உள்நாட்டு மகளிரை மணம் செய்து தொடர்ந்த சந்ததியினரைக் கொண்டு இலங்கையில் பல பாகங்களைத் தம் வசம் வைத்திருந்தனர். ஏறக்குறைய அறுபதாண்டுகள் டச்சு நாட்டவர்களை காலூன்ற விடாமல் பார்த்துக்கொண்டனர் போர்த்துக்கீசியரின் சந்ததிகள். போர்த்துக்கீசியர்களை வென்று தம் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிய டச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்கள்), போர்த்துக்கீசியர்போலவே உள்ளூர் மகளிரை மணம் செய்து சந்ததியினை வளர்த்தனர். ஆனால், ஒரு சிறு மாற்றத்துடன். ஒல்லாந்தர்கள் திருமணம் செய்துகொண்டது உள்ளூர் போர்த்துக்கீசியப் பெண்களை. இந்த உறவுகளால் வந்த சந்ததியினரை பெர்கர் என்றழைத்தனர்.

காலபோக்கில் டச்சு பேர்கர் என்றும், போர்த்துக்கீசிய பேர்கர் என்றும் வழங்கலாயிற்று. டச்சு மொழியில் burgher என்றால் சிட்டிசன் என்று பொருள்.

போர்த்துக்கீசியர்களுக்கும் ஒல்லாந்தர்களுக்கும் பிறகு வந்து முழு இலங்கையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்களுடன் தம்மைப் பிணைத்துக்கொண்டனர் டச்சு பெர்கர்கள். தம்முடைய டச்சு மொழி எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஆங்கிலம், ஆங்கிலேயரின் பழக்க வழக்கங்களுக்குத் தாவினர். இலங்கை சுதந்திரம் அடைந்தபிறகு பல பெர்கர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.


மேலதிக விவரங்களுக்கு:

http://www.geocities.com/Athens/Styx/6497/ceylonD.html


http://www.travelsrilanka.com/essence/people/burghers.php

Thursday, February 12, 2004

Pow-wow in Honolulu





தாமஸ் பார்க் - ஹானலூலுவின் பார்க்குகளில் இதுவும் ஒன்று. இந்தப்பூங்காவின் நட்ட நடுவில் இருக்கும் ஆலமரந்தான் போனவருடம் ஹானலூலுவில் இருக்கும் மரங்களில் அழகான மரம் என்று பெயர் வாங்கிற்று. நிசமாத்தான் சொல்றேன். நம்புங்க. இப்படியெல்லாங்கூட சில சமயம் செய்வாங்க. ரொம்ப வெயில்ல நடந்துட்டாங்க'னு நாங்க பேசிட்டு விட்டிருவோம்.

இந்த தாமஸ் பார்க்கில் ஒவ்வொரு வார-இறுதியும் ஏதாவது விசேஷம் இருக்கும். அப்படி ஒரு வாரம் நடந்த அமெரிக்க பழங்குடியினர் விழாவில் இரண்டு சிறுவர்கள் பாரம்பரிய உடையில் இருப்பதை இங்கே காண்கிறீர்கள்.

Tuesday, February 10, 2004

ஊர்வலமோ ஊர்வலம்!





ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஊர்வலமோ, கேளிக்கையோ ஹானலூலுவில் நடந்துகொண்டே இருக்கும். பின்ன, விருந்தாளிகளையும் வீட்டுக்காரர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டுமல்லவா?

அதுபோன்றதொரு ஊர்வலத்தில் எடுத்த புகைப்படம் உங்களுக்காக.

Monday, February 09, 2004

Thankyou! Weblogs.us

வெங்கட்டைப்போல 'மூவபிள் டைப்'இல் வலைப்பதிவு செய்ய நினைப்பவர்கள், தமக்கென்று தனியிடம் இருந்தால்தான் செய்யமுடியும். நான் தொடர்ந்து வலையில் நடைபழகுவேன். நம்பிக்கை இருக்கிறது. தனியிடமும் போக என்னால் முடியும். ஆனால், இந்த 'மூவபிள் டைப்' எனக்கு ஒத்து வருமா இல்லையான்னு தெரியாம எப்படி இறங்குறது? சில சமயம், என்னால தொடர்ந்து பயன்படுத்துற அளவு சௌகரியமில்லைன்னா என்ன செய்யுறது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா?


கவலையை விடுங்கள். உங்களுக்காக http://weblogs.usஇல் ஜே.டி, ரொன்னீ, முரளி மூவரும் அமைத்துத் தருகிறார்கள். முயற்சி செய்துபாருங்களேன்.

Sunday, February 08, 2004

Negative Energy to P o s i t i v e - E n e r g y


பிறமொழிகளில் வலைப்பதிவுகள் ஒரு இயக்கமாக இயங்குவதுபோல தமிழிலும் வலைப்பதிவுகள் கூட்டாக இணைந்து இயங்கவேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. தமிழ்வலைப்பதிவுகள் குறித்து வெங்கட் தமிழ்வலைப்பதிவுகள் குழுமத்தில் எழுதியது போல.

இப்பொழுது ஏறக்குறைய 80 வலைப்பதிவுகள் இருக்கின்றன. இன்னமும் பல உருவாகலாம். வலைப்பதிவுகள் எத்தனை சுலபமானது என்பது தெரியாததாலேயே, பலர் இதில் இறங்கவில்லை என்பதே நான் அனுபவரீதியாக அறிந்தது. அதற்காகத்தான் தமிழ் வலைப்பதிவுகளுக்காக ஒரு faq (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) பதிவு உருவாக்க சிலர் முயன்றோம். இதுவரை சிலரே இதில் ஈடுபட்டுள்ளார்கள். இது முழுமையானால், புதிதாக வந்து சந்தேகம் கேட்பவர்களை இங்கே அனுப்பலாம். தமிழில் வலைப்பதிவுகள் உருவாக்குவது ஒன்றும் பெரிய வித்தையில்லை என்பதையும் காட்டலாம்.

நான் என்னால் முடிந்த அளவு, bloggerஇல் எப்படி வலைபதியலாம் என்பதை Tamilblogs-tips&tricksஇல் காட்டியிருக்கிறேன்.

கடந்த ஆறுமாதங்களில் தமிழில் வலைப்பதிவுகள் பெரிதும் முன்னேறி இருக்கின்றன. இன்னமும் நிறைய தொழில்நுட்ப ரீதியாக செய்யவேண்டியது இருக்கிறது. இதற்குத்தேவையான உதவி கிடைப்பதில்லை. தலைவர்களும் ஸ்பான்ஸர்களும் வரும் அளவுக்கு தன்னலமற்ற தொண்டர்களும் ஆர்வலர்களும் கிடைப்பதில்லை.

தமிழ் வலைப்பதிவுகள் இப்போது இலவச சேவைகளைப்பயன்படுத்துகிறார்கள். சிலர், தத்தம் சொந்த இடங்களில் வலைபதிகிறார்கள். பெரும்பாலான தமிழர்கள், இலவச சேவைகளையே தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இதில் வெங்கட் சொன்னமாதிரி, தமிழ் வலைப்பதிவர்கள் ஒருங்கிணைந்து வலைப்பதிவு சேவை ஒன்றை உருவாக்கலாம். இது வலைபதிவர்கள் தத்தம் சுதந்திரத்தையும் காத்துக்கொண்டமாதிரியும் இருக்கும். பிற வலைபதிவர்களோடு கைகோர்த்து ஒரு இயக்கமாகவும் இயங்கலாம்.

blogspotஇல் வலைபதிபவர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சினை கருத்துப்பெட்டி. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் ASP Blogcommentsஐ எப்படி நிறுவுவது என்றும், தமிழை அதில் எப்படிப்பயன்படுத்துவது என்றும் கண்டறிந்தால் பெரிய உதவியாக இருக்கும்.

இன்னொரு விஷயம். தமிழ் வலைபதிவர்களுக்கு வலைப்பதிவின் அருமையும் பெருமையும் ஏற்கனவே தெரிந்தவிடயம். கொல்லன் பட்டறையில் ஊசி விற்காமல், தமிழ் வலைப்பதிவு பற்றித் தெரியாதவர்களிடம் நாம் பேசவேண்டும். இதையே நான் மரத்தடி நண்பர்களிடமும், பிற குழு நண்பர்களிடமும் செய்தேன். செய்கிறேன். இங்கே, நான் உதவிய பல வலைபதிவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளில் என் பெயரோ, சுட்டியோ இல்லை. அதை நான் விரும்பியதும் இல்லை. சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது என்று நான் நினைப்பவர்களை அணுகி, வலைப்பதிவுகள் பற்றிச் சொல்லி, இங்கு அழைத்து வந்திருக்கிறேன்.

இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மீனா. காரைக்குடிக்காரரான இவர், அவருடைய சமூகத்தின் பழக்கவழக்கங்கள், செட்டியார்களுடைய வரலாறு, உணவுப்பழக்கங்கள் (செட்டிநாட்டு உணவை உருசிக்காதவர் இங்கிருக்க மாட்டீர்கள்), அவருடைய குடும்பத்துப்பெரியவர்கள் உறவினர்கள் பற்றி, பழங்காலத்தில் செட்டிநாட்டுக்காரர்கள் பயணம் செய்த நாடுகள், அனுபவங்கள் பற்றி, சிங்கையில் செட்டியார்களின் வரலாறு, இப்போது எப்படி இருக்கிறது என்று எத்தனையோ சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவரிடம் பேசி, அவரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடிய சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தி, blogspotஇலோ, blogdriveஇலோ ஒரு வலைப்பதிவை ஏற்படுத்திக்கொடுக்கலாம். ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் எழுத, அதுவும் இங்கே இணையத்தில் எழுதத்தொடங்கிய எனக்குத் தெரியும் அந்த முதலாவது அடிதான் தேவையென்று. அதற்குப்பிறகு தமிழுக்கு ஒரு அருமையான வலைப்பதிவு கிடைக்கலாம். தனியாக வலைப்பதிவு அமைக்கத் தயங்குபவர்களை http://yarl.net/ போன்ற கூட்டு வலைப்பதிவிற்கு அனுப்பி வைக்கலாம். இங்கே அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக ஒன்றும் செய்யத் தேவையில்லை.


சபாநாயகம் ஐயாவுடையதைப் போல. அவரை மரத்தடியில் கண்டபோது, வலைப்பதிவுகள் பற்றிச் சொல்லி, அவருடைய சின்ன வயது அனுபவங்களையும், அப்போதைய வாழ்க்கை முறைபற்றியும் இளைய தலைமுறையுடன் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக்கேட்டபோது, அவர்தான் 'கணையாழி' இதழைத் தொகுத்த சபாநாயகம் என்று நான் அறிந்திருக்கவில்லை. வரலாற்றின்மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தால், அவரிடம் கேட்டேன். நான் எதிர்ப்பார்த்திருந்தது - நாற்பது ஐம்பதாண்டு காலத்திற்கு முன்பு தஞ்சை, சிதம்பரம் பகுதியில் தமிழர் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் என்பது. கிடைத்தது எதிர்பார்க்காத தமிழ் இலக்கிய வரலாறு.

ஒவ்வொரு முறை அவர் எழுதும்போதும், இன்னம் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள் ஐயா என்ற கோரிக்கையை தனியாகவும், மரத்தடியிலும், அவருடைய வலைப்பதிவிலும் சந்தித்து வருகிறார் அவர். கூடிய விரைவில் அதை நிறைவு செய்வார் என்று நம்புவோம்.

அதைப்போல வலைப்பதிவுகள் உலகிற்கு செம்மை சேர்க்கக்கூடியவர்கள் என்று நான் கருதும் பலர் யாகூ குழுக்களில் இருக்கிறார்கள். நாக. கணேசன் (தமிழ் வலைப்பதிவுகள் பற்றி எழுதி வரும் இவர் வீட்டு நூலகம் பற்றி நான்கூடக்கேள்விப்பட்டு இருக்கிறேன்.), சுஜாதா (பல சுவாரசியமான விஷயங்களை இவருடைய மடல்களில் படிக்கிறேன்). சிங்கை எழுத்தாளர் கமலா அரவிந்த். இவரிடம் பல மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவுகள் பற்றிப்பேசி, ஒன்றை உருவாக்கியும் இருக்கிறேன். அவருடைய நேரமின்மையாலும், என்னுடைய சோம்பல்தனத்தாலும் பிறகு தொடரவில்லை. ஆயினும் அவர் இதுவரை எழுதியவற்றை, அவர் விரும்பிய வண்ணம் ஒரு வலைப்பதிவில் தொகுத்து வைத்திருக்கிறேன்.

Friday, February 06, 2004

Negative Energy - 1


நேரப்பற்றாக்குறை காரணமாக, இங்கே என் பள்ளி/விடுதி மற்றும் என்னுடைய பிரலாபங்களை அள்ளி விட முடியவில்லை. கொஞ்ச நாட்களுக்குப்பிறகு தொடர்கிறேன் என்று இங்கே கருத்துகள் பகுதியில் எந்த நேரத்தில் எழுதினேனோ தெரியவில்லை. எதிர்மறையான திசையில் நேரத்தை வீணடிக்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய பொழுதையும் வீணடிப்பதற்கு மன்னியுங்கள்.

இன்றும் நாளையும் நேரமில்லை. ஆகவே, இங்கே சில விஷயங்களை உள்ளிடுகிறேன். படித்து வையுங்கள். வந்து தொடர்கிறேன்.

இவ்வாரம் வலைப்பூவின் ஆசிரியராக இருப்பது பத்ரி சேஷாத்ரி. பல நல்ல கருத்துகளை சொல்கிறார். தமிழ் வலைப்பதிவுகள் தங்களால் இயன்றதை செயல்படுத்த முனையலாம்.

முதலில் பத்ரியை, நான் வரவேற்ற பதிவில்-

வந்த கருத்துகள்.


N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/01/2004 00:13:
வாங்க பத்ரி. எனக்கு இன்னும் வலைப்பதிவின் வலுவின் மீது நம்பிக்கை இருக்கிறது. மிகச்சிறந்த வலைப்பதிவுகள் மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை இவைகளுடன் தோள் நிற்கும். வலைஞர் குழாம் ஒன்று உருவாகி வருவதையும் காண்கிறேன். மடலாடற் குழுவின் பலத்தை வலைப்பதிவு அடையுமா? அடைய என்னென்ன செய்யவேண்டும்?

N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/01/2004 00:17:
இந்த வலைப்பூ இதழில் பின்னூட்டம் தவிர பொது அறிவிப்புகளுக்கும் இடம் வேண்டும். இது இன்னும் முழுமையான மின்னிதழ் இல்லை. மின்னிதழின் சௌகர்யங்களை இது இன்னும் ஸ்வீகரிக்கவில்லை. இந்த இதழ் சிறப்புற என்ன செய்ய வேண்டும். வலைப்பதிவின் பிதாமகர் நீங்கள். வருக! வருக!



Pari (http://pari.kirukkalgal.com) @ 02/01/2004 19:28:
இது ஒரு மின்னிதழ் என்ற பார்வையே சரியில்லை எனப்படுகிறது. மேலும் மதுரைத்திட்டம், அறக்கட்டளைகள், வலைப்பூ இவற்றிற்கான தொடர்பு என்ன? முதல் இரண்டும் புத்தகங்களை மின் வடிவ ஆவணப்படுத்துதல் வகை. வலைப்பூ என்பது முற்றிலும் மின் வடிவம். இரண்டுக்கும் என்ன முடிச்சு? மேலும் வலைப்பூவில் ஆவணப்படுத்துதல் தானாகவே நடக்கிறது; தேடும் வசதியோடு.


Pari (http://pari.kirukkalgal.com) @ 02/01/2004 19:29:
எனப்படுகிறது = என படுகிறது





கூட்டுவலைபதிவு பற்றி பத்ரி எழுதியவை

கூட்டுவலைபதிவினைப்பற்றி பத்ரி எழுதியதும் கருத்துகள் பகுதியில் target=_va>நடந்தவை



N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/03/2004 05:35:
பத்ரி: இந்த ஐடியாவுக்கு "ஓ"




Kasi (http://kasi.thamizmanam.com) @ 02/03/2004 20:19:
கண்ணன், நீங்கள் ஆரம்பித்த உயிர்ப்பூ கூட அதுமாதிரி எண்ணத்தில்தானே. இந்த பலரும் சேர்ந்து செய்வது நன்றாக இருக்கும், எப்போதென்றால், ஒரு அணி அமைந்து, ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் முன்னெடுத்துச் செல்வதானால். <10 பேர் சேர்ந்து செய்தால் நனறாக இருக்கும் என நினைக்கிறேன். இது ஒரு புது மாத்ரி இணைய இதழாக இருக்கும். இப்போது வரும் இணைய இதழ்கள் சில, மாதம் ஒருமுறை வருவதினால் அவற்றின் முக்கியத்துவத்தை இழக்கின்றன என்பது என் அபிப்ராயம். இது போல அன்றாடம் புதுப்பிக்கப்படும் ஒன்று அந்தக் குறைய நிவர்த்தி செய்வதாயும் இருக்கும்.




meena () @ 02/03/2004 21:48:
கண்ணனின் உயிர்ப்பூ அருமையானது ஆனால் அதில் யாருமே அழைப்புவிடுத்தும் ஏனோ பங்கெடுக்க மாட்டேனென்கிறார்கள்
(பத்ரி நீங்கள் கூட )




பத்ரி (http://thoughtsintamil.blogspot.com/) @ 02/03/2004 23:39:
எந்த ஒரு கூட்டு வலைப்பதிவுக்கும் தொடக்கத்தில் ஒருவரது விடாமுயற்சி தேவை. ஒரு குறுகிய நோக்கம் தேவை. அந்த நோக்கத்தில் அவருடன் ஈடுபட மற்றும் இரண்டு பேரையாவது அவர் முதலில் பிடிக்க வேண்டும். நாலைந்து பேரானவுடன் தானாகவே சூடு பிடித்து விடும்.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/04/2004 16:42:
பத்ரி, காசி, மீனா சொல்வது சரி. ஒரு புதிய முயற்சி ஆரம்பித்து வைத்த்தால் நிரம்ப மெனக்கிட வேண்டிக்கிடக்கு. உயிர்ப்பூவைப் பாராட்டுபவர்கள் இன்றும் உண்டு ஆனால் பங்களீப்பவர் குறைவு.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/04/2004 16:45:
'குரல்வளை' எவ்வளவு சுவாரசியமான விஷயம்? ஆனால் பாருங்கள்! நமக்கு ஈதல்ல தொழில், ஒரு ஆர்வத்தில் செய்வதுதானே. குறைகள் இருக்கத்தான் செய்யும். நாலு கை சேர்ந்தால் நிவர்த்தியாகிவிடும்.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/04/2004 16:50:
தமிழ் வலைப்பதிவர் குழும இதழ் (as a community jornal) என்னும் போது இன்னும் ஆர்வம் வர வாய்ப்பிருக்கிறது. இந்த இதழ் உயிர்பெற்றால் தமிழ் மரபு அறக்கட்டளையின் முழு ஆதரவும் இருக்கும். வலைப்பதிவின் வலு எனக்குத்தெரியும். அது பற்றி தொடர்ந்து திசைகளில் எழுதிவருகிறேன்.




Pari (http://pari.kirukkalgal.com) @ 02/04/2004 19:53:
கண்ணன்,
நீங்கள் மீண்டும் மீண்டும் வலைப்பூவுக்கும் மரபு அறக்கட்டளைக்கும் முடிச்சு போடுவதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. என் முந்தைய பின்னூட்டத்தைப் படித்தீர்களா என்று தெரியவில்லை. இல்லையென்றால் இங்கே படிக்கவும்.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 05:26:
பரி: மேற்சொன்ன இரண்டு திட்டங்களும் தமிழை இலக்க வடிவில் நிரந்தரப்படுத்த முயல்கின்றன. தமிழ் எழுத்தில் சம் காலம் என்பது பாரதிக்குப் பின் என்று ஒரு கணக்குண்டு. சம கால எழுத்தே இன்னும் மின்வடிவிற்கு வரவில்லை. அதில் இக்குணூண்டு நாம் எழுதுவது. இது சம-சம கால எழுத்து. இதை வலைப்பதிவு பதிப்பிக்கிறது. அந்த அளவில் எங்கள் பளுவைக் குறைக்கிறது.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 05:29:
மேலும் வலைப்பதிவில் கருணாகரமூர்த்தி போன்ற சமகால எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை மின்வடிவில் தக்க வைக்கும் போது இன்னும் பளு குறைகிறது. எனவே வலைப்பதிவு என்பது மின்னாடற்குழுவில் வரும் எழுத்தைவிட காலம் தாண்டக்கூடியது. தமிழ்.நெட்டில் நான் ஆயிரம் பக்கம் எழுதியிருப்பேன். அது எங்கே இப்போ? ஆனால் என் வலைப்பதிவு எழுத்து நிற்கும். தேட முடியும்.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 05:33:
வலைப்பதிவில் ஆறாம்திணையின் பண்புகளை மடலாடற்குழுவைவிட அதிகம் காட்டமுடியும். எனவேதான் எங்களுக்கு வலைப்பதிவு முக்கியமாகப்படுகிறது, at least எனக்கு




Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 06:52:
கண்ணன், வலைப்பதிவு தன்பாட்டில் தன் காலில் நின்றுவிட்டுப்போகட்டுமே! நிற்கும்!!! உறுதியாக நிற்கும்!!!

ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் இருக்க்ம் வலைப்பதிவுகளைப்பாருங்கள். அதுபோல புதிய திசையில் தமிழ் வலைப்பதிவுகள் நடக்கட்டுமே!

தமிழ்மரபுக்கட்டளையின் பணிக்ளில் ஈடுபாடு இருக்கிறது. (எனக்கு) ஆனால் அதே சமயம் வலைப்பதிவுகளுக்கும், எந்த ஒரு குழுவிற்கும் முடிச்ச்சுப்போடுவதை நான் விரும்பவில்லை. சுதந்திரமாக செயல்படுவதே வலைப்பதிவின் பெரிய பலம். இப்படி முடிச்சுப்போட்டு அதை தொலைக்கவேண்டாம் நாம்.




Pari (http://pari.kirukkalgal.com) @ 02/05/2004 15:52:
>ஆனால் என் வலைப்பதிவு எழுத்து நிற்கும். தேட முடியும்.
இதையேத்தான் நானும் சொல்றேன்.

உங்கள் நோக்கம் one stop shop மாதிரி எல்லாத்தையும் ஒரே எடத்துல வைக்கணும்னா ஸாரி, அது நடக்காத காரியம். மதுரைத்திட்டம், அறக்கட்டளைகளின் குறிக்கோள் என்னைப்பொறுத்தவரை வேறு. மின் வடிவில் இல்லாதவற்றை மின்வடிவாக்கிச் சேமிப்பது. நேரடியாக மின்வடிவில் வரும் படைப்புகளைச் சேமிப்பது தானாக நடக்கிறது. எல




Pari (http://pari.kirukkalgal.com) @ 02/05/2004 15:53:
...எல்லாம் யுனிகோடுக்கு மாறிவிட்டால் தேடுதல் வசதியாக இருக்கும் (திஸ்கியிலும் தேடலாம்).

ஆங்கிலத்தில் இணையத்தளங்கள் பல்கிப் பெருகியதன் விளைவாக உருவான
yahoo/google directory மாதிரி தமிழ் இணையத்தளங்களை வகைப்படுத்தி வைக்கலாம். அதுக்கு விக்கிபீடியா புதுசா வந்திருக்கு. இதக் கொஞ்சம் பரவலாக்கணும்.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 16:34:
பாரி: ஏன் இதை இவ்வளவு நெகடிவ்வாகப் பார்க்கிறீர்கள்? வலைப்பூ போல் ஆரம்பித்ததுதான் அவ்வியக்கங்களும். தன்னார்வக்குழுவை இப்படி புறக்கணித்தால் நாளை நீங்களும் புறக்கணிப்படுவீர். இது பொதுவிதி. மேலும் வலைப்பூக்கள் தனியாக இயங்கினாலும் அவை சரித்திர நோக்கில் தமிழை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அத்திடங்களுடன் இயல்பாக முடிச்சு விழுகிறது. யாரும், யார் புகழையும் தூக்கிக்கொண்டு போய்விடவில்லை இங்கு!




Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 20:33:
பரி கேட்பதில்/ சொல்வதில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது.

இங்கு புரியாத விஷயம்.

>>>>>
பாரி: ஏன் இதை இவ்வளவு நெகடிவ்வாகப் பார்க்கிறீர்கள்? வலைப்பூ போல் ஆரம்பித்ததுதான் அவ்வியக்கங்களும். தன்னார்வக்குழுவை இப்படி புறக்கணித்தால் நாளை நீங்களும் புறக்கணிப்படுவீர். இது பொதுவிதி. மேலும் வலைப்பூக்கள் தனியாக இயங்கினாலும் அவை சரித்திர நோக்கில் தமிழை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அத்திடங்களுடன் இயல்பாக முடிச்சு விழுகிறது. யாரும், யார் புகழையும் தூக்கிக்கொண்டு போய்விடவில்லை இங்கு!
<<<<<<<<

your strong reaction!




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 16:39:
காலத்தின் கண்ணாடியாக நிற்கும் எழுத்தை மட்டுமே இணைத்துக் கொள்ளமுடியும். எல்லாக்குப்பைகளையுமல்ல! மேலும் வலைபூவின் பலத்தை நான் theoritical-ஆகச் சொன்னேன். சும்மா ஒக்காந்து ஒக்காந்து தமிழனால் வம்பு பேச (எழுத) முடியும். உங்கள் வாழ்நாளில் ஏதாவதொரு புத்தகத்தை தத்தெடுத்து நிரந்தரப்படுத்தி உள்ளீர்களா? செய்திருந்தால் வலைப்பூவின் கனம் புரியும். அது எவ்வளவு powerful medium என்பது புரியும். யாரும் சொன்னால் செய்யாத நபர்கள் இம்முறையில் தானாகவே பதிவு செய்கின்றனர். அது தமிழுக்கு வளம் சேர்க்கிறது. இப்படி வராத எழுத்தைத்தான் வலிய அத்திட்டங்கள் மெனக்கிட்டு மின்னாக்கம் செய்கின்றன.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 19:56:
Dear Mathy:"தமிழ்மரபுக்கட்டளையின் பணிக்ளில் ஈடுபாடு இருக்கிறது. (எனக்கு) ஆனால் அதே சமயம் வலைப்பதிவுகளுக்கும், எந்த ஒரு குழுவிற்கும் முடிச்ச்சுப்போடுவதை நான் விரும்பவில்லை. சுதந்திரமாக செயல்படுவதே வலைப்பதிவின் பெரிய பலம். இப்படி முடிச்சுப்போட்டு அதை தொலைக்கவேண்டாம் நாம்." I think you grossly misunderstood. Tell me how many programs have been spoiled by PM & THF? We are talking about cordial "linking" without loosing independence which is be mutually beneficial.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:00:
Selected Tamil Blogs of Literary merit can be co-sponsored by PM & THF. It is recognition and beneficial. Of course, this has to be done based on mutual concern. There is obsolutely nothing wrong in it. Probably you should explain more on your inherent fears




Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 20:44:

Kannan, what is there to be sponsored?

The space is being given by blogger or blogdrive or some such tool. In the future, Tamil Blogs might have its own server (for free, without any alliance or any commitment to any one).

Kannan, may be you should explain your inherent fear!

My inherent fear is that Tamil Blogs should NOT lose their indepence. That's all. If a blog is strong (in content, design etc etc) it will stand on its own. And it would be heard. This sort of a thing is crucial for a country like India. Tamils maybe chitchatting or doing some useless things in their blogs, it is their wish to do so. May be that is exactly what they want to do. They dont want somebody looking over their shoulder

Maybe they want to do their things their own way, without any alliances




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:06:
Probably Venkat is right! It is hard for Tamils to co-operate and show their strength! Similar programs should have an understanding between them. This is normal. Why such a big angry head shake from you?




Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 20:07:
Kannan, Did I say that PM & THF have spoiled anything? I have gained a lot from PM. I am also doing whatever I can for preserving books for 'eternity' - in PM.




Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 20:13:
All I said was that Let Blogs stand on their own feet. And there can be/should mutual understanding, respect, linking amidst all Tamils. Be it, Web Magazines (Thisaigal is instrumental in publicising, encouraging Blogs). Thisaigal kindled the idea. But, I dont see Maalan trying to forge a link with the blogs. Might be that he has realised the power of blogs. - independence. That does not mean, that blogs would ignore other Tamil web magazines, journels, websites, yahoo! groups, or organizations. ALL have to co-exist.




Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 20:19:
தமிழ் வலைப்பதிவர் குழும இதழ் (as a community jornal) என்னும் போது இன்னும் ஆர்வம் வர வாய்ப்பிருக்கிறது. இந்த இதழ் உயிர்பெற்றால் தமிழ் மரபு அறக்கட்டளையின் முழு ஆதரவும் இருக்கும். வலைப்பதிவின் வலு எனக்குத்தெரியும். அது பற்றி தொடர்ந்து திசைகளில் எழுதிவருகிறேன்.

Kannan I dont understand what you are trying to say! Could you please elaborate on it?

இந்த வலைப்பூ இதழில் பின்னூட்டம் தவிர பொது அறிவிப்புகளுக்கும் இடம் வேண்டும். இது இன்னும் முழுமையான மின்னிதழ் இல்லை. மின்னிதழின் சௌகர்யங்களை இது இன்னும் ஸ்வீகரிக்கவில்லை. இந்த இதழ் சிறப்புற என்ன செய்ய வேண்டும். வலைப்பதிவின் பிதாமகர் நீங்கள். வருக! வருக!

About your comment about public announcements. Tamil Blog technologies are still evolving. Right now two ppl are experimenting with Nucleus. Did u try it? This particular blog is functio




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:33:
Mathy: There is no need for panic here. Nobody is stealing others effort. Similar minds/development join hands naturally. Talking about Maalan..watch out their next step People tend to join hands Mathy. Don't be too skeptical.




Pari (http://pari.kirukkalgal.com) @ 02/05/2004 20:38:
உங்கள் வாழ்நாளில் ஏதாவதொரு புத்தகத்தை தத்தெடுத்து நிரந்தரப்படுத்தி உள்ளீர்களா? செய்திருந்தால் வலைப்பூவின் கனம் புரியும்.
-- To be honest, I'm perplexed by this question. What's the relation between e-texting a book and *already* e-texted text?

It's very easy to get emotional in aruguments. I approach any argument with rationale. Please don't come to abrupt conclusions and never ever make a generalized comment.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:39:
Ok I explain what THF can do with the proposed Blog Journal (that is going to compete with Valaippoo, watch out ). UyirppU was initiated on its own without knowing dialognow.org or similar efforts. I think at some stage of development such new idea ideas crop up on its own. UyirppU could still function in the way Badri visualizes. But I do not know why people like you join? On the other I welcome any development that enriches Tamil. Read my article in En Madal prasing your efforts. I don't gain anything out of it. But I am happy about the development.




Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 23:03:
kannan, dont know what the competition is?

valaippoo was started to encourage blogging, to create a camaraderie among tamil bloggers. what's the use of blogging, if no one reads the blogs?

valaippoo's goals havent changed :)




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:52:
Pari : Sorry about it. Probably you have not not watched my ideas over Blogs that I write in Thisaigal. PM & THF requests volunteers to digitize books etc. This include modern literature as well. I was largely responsible for initiating the e-preservation of Srilankan modern literature. But it is vast & we do not have enogh volunteers to do that. But when we see that this preservation happens in Blogs (ex.K.moorthy) we want to appreciate it and welcome the authors to share their work in PM as well. Is it wrong? Don't you see the connection? That's all.




Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 23:12:
this is not fully ready yet. have to go thru for spelling mistakes etc. but just a curtain raiser :)

http://ponnambalam.blogdrive.com

FYI, I too am volunteering in the PM efforts :) (Just for an information. not boasting or anything)




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 20:57:
Back to Mathy Well UyirppU has not picked up speed yet. It is visualised as a multi-authored e-journal in English on Tamil Heritage (Tamils prefer to write in English about Tamil, is it not When Badri coined a similar efoort in Tamil naturally I was triggered. I know the power of team work. You guys do a pretty good job. THF wants to join hands, that's all. As for as THF is concerned this is e-preservation of modern Tamil literature. It will promote this activity in its forums and contribute. nything wrong?




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/05/2004 21:05:
Mathy: Regarding public announcement. Yes, there is a need for a 'space' where public announcements are made. At times people miss reading 'comments' as it is dynamic and moves down with new entries. Whereas announcements can stand alone to capture the attention (this can be easily moderated too). Afterall we evolve into a community now and there is a need for a 'notice board' as well. I'm in the process of revamping my Blogs. Nucleus one day




Mathy Kandasamy (http://mathy.blogdrive.com) @ 02/05/2004 23:14:
did install the bulletin board here. there wasnt much response. guess u were not here, when that was installed. had to take it out cos of lack fo response nad because of the free blogspot problems.

one day!




ravisrinivas (http://ravisrinivasblog.rediffblogs.com/) @ 02/05/2004 22:55:
there is enough scope for all.for example there can be a blog on modern tamil literary criticism where one can publish short reviews,list new articles in little magazines,list new books etc.there can be a blog on tamil heritage or for that matter on tamil and cyberspace.but with limited number of persons volunteering and getting involved trying too many projects may create problems.i am planning an exclusive blog on intellectual property rights in tamil with links to other blogs and sources in english.but it will take time
to do that as i dont want to start one when i cant devote time for it.
synergy is important.let us keep that in mind.




Badri (http://thoughtsintamil.blogspot.com/) @ 02/05/2004 23:05:
Kannan: My view is that "unorganized" individuals are always afraid when you bring up names like "THF" will support your ideas. It would be fair to say that nobody here probably knows what THF is all about, why should THF support them and so on. Maybe you could clarify what THF is (I know there is a web site...) where does it get funding (if it gets funding from others, that is), its focus and why others should be friendly to THF and not get jittery. If you don;t explain this, chances are that people will be concerned... That is what is happening here.




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/06/2004 00:10:
Thanks Badri and Srinivas. I'm talking about synergism here. We are all Bloggers. We need not have unneccessary 'Angst'. With all good intention I propose something. Let me get down to explain what you said in my Blog tonight and give a link.




ரவியா () @ 02/06/2004 05:44:
அப்பாடா ! பத்ரி சொன்னாத்தான் கேக்கிறீங்கபா(மா) . PM ம தெரிஞ்ச அளவுக்கு THF எல்லாருக்கும் தெரியாதுதான்....கண்ணன் அவர் வலைப்பூவில் விளக்கி சொன்னா புரிய போகுது...It was a dialogue of the deaf...உஷா இல்லாமலேயே பத்திக்கிச்சே....




N.Kannan (http://emadal.blogspot.com) @ 02/06/2004 06:51:
வலைப்பூ வாத்தியார் சார் நீங்க சொன்னபடி செஞ்சுட்டேன். ஏதோ என் ஆதங்கம். சொல்லியாச்சு. சொடுக்குக!




meena () @ 02/06/2004 06:52:
அடக்கடவுளே




meena () @ 02/06/2004 07:08:
நல்லவேளை பத்ரி வந்தீங்க நன்றி




Balaji (http://etamil.blogspot.com) @ 02/06/2004 08:20:
மதி...http://ponnambalam.blogdrive.com நன்றாக உள்ளது. ஆனால், இது ஜியோசிடீஸ் போன்று எங்காவது வலைத்தளமாக போட்டால் நல்லது. இந்த மாதிரி ஒரு ஆக்கத்துக்கு வலைப்பதிவு என்னும் 'பெயர்' தேவையா?




kasi (http://kasi.thamizmanam.com) @ 02/06/2004 11:43:
நான் எதார்த்தமாத் தான் கேட்டேன். 'உயிர்ப்பூ' ஏன் பிரபலமாகலைன்னு எனக்குத் தோணுறது:
அதன் வடிவம் () மட்டும்தான் கூட்டுவலைப்பதிவுடன் ஒத்திருக்கிறது. அதன் குறிக்கோள், மொழி, அதுக்கு அளிக்கக்கூடியவர்கள் வட்டம், வேன்டுகோள் வைக்கப்பட்ட வட்டம், காலம், இத்தனையிலும், இன்னிக்கு பத்ரி முதல் எல்லாரும் அலசும் 'கூட்டுவலைப்பதிவு'க்கும் உயிர்ப்பூவுக்கும் எத்தனையோ வித்தியாசம். 'கூட்டு-அளிப்பு' என்ற ஒரே வடிவத்துக்காக நான் அதைக் குறிப்பிட்டேன்.




kasi (http://kasi.thamizmanam.com) @ 02/06/2004 11:45:
இன்று ஆறுமாதமாய் வலைப்பதிவுகள் வளர்ந்துவருகையில், கண்ணன் அதற்கு மறுபடி புத்துயிர் ஊட்ட முயற்சிப்பதிலும் தவறில்லை, வலைப்பதிவர்கள் அதனோடு அல்லது THF-ஓடு என்று வட்டத்துக்குள் வராமல் தனித்தியங்க ஆசைப்படுவதிலும் தப்பில்லை (என்பது எ.தா.க.) ஆனால் ஒருவரை ஒருவர் புரிவதற்குள் அவசரப்பட்டு ஏதேதோ எழுதிவிட்டோம். வலைப்பதிவு என்பது என்னைப் பொறுத்தவரை, நான் முதலில் சொன்னது போல என் வீட்டுத்திணையில் உக்காந்து நான் அடிக்கும் அரட்டை. அதில் என் சுதந்திரம் மிக முக்கியம். நான் இப்படியே இருக்கத்தான் ஆசைப்படுகிரென். என்னால் முடிந்த வரை சத்திரம், சாவடி, மண்டபம், இங்கெல்லாம் பலர்கூடிப் பேசுவதிலும் விருப்பம், நேரம் பொறுத்து பங்கெடுப்பேன். எதிலும் ஒட்டாத ஒரு பற்றற நிலைன்னு வெச்சிக்கலாமே




kasi (http://kasi.thamizmanam.com) @ 02/06/2004 11:49:
typo: பற்றற=பற்றற்ற (read பொறுப்பற்ற )




kasi (http://kasi.thamizmanam.com) @ 02/06/2004 12:00:
பாலாஜி சொல்வது மிகச்சரி. செய்ய எளிதாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக வலைப்பதிவு வடிவத்தில் 'வலைப்பக்க'த்தை அமைப்பது சரிதானாவென்று எனக்கும் ஐயம் உண்டு. என்றோ எழுதியற்றை ஏற்றிவைத்தல், முகப்புப் பக்கம் வைத்து பொருளடக்கம் கொடுத்தல், போன்றவை வலைப்பக்கத்தின் அடையாளங்கள். தோன்றுவதை சுடச்சுடப் பதித்தல், அடிக்கடி (பாலாஜியைப்போல்) பதித்தல், மறுமொழி பரிமாற்றம், போன்றவை வலைப்பதிவின் அடையாளங்கள். (நான் தொல்காப்பியர் இல்லை, இந்த இலக்கணம், பார்ப்பதை வைத்து செய்த ஒரு அனுமானம், அவ்வளவே)





kasi (http://kasi.thamizmanam.com) @ 02/06/2004 12:15:
//Kannan: Ok I explain what THF can do with the proposed Blog Journal (that is going to compete with Valaippoo, watch out ).//

I too am not comfortable with the word compete here. Valippoo is not *run* by *someone*. Mathy provides organizational support, and with difficulty arranges weekly editors, No questions of ownership here, hence no question of competing. It is the blogging community that is sustaining this. So, against whom is the competition, ourselves?